Tuesday, December 13, 2011

வாழ்த்து



பெற்றால் மட்டும் போதுமா?
எங்கள் கமலா குழந்தைகளை வளர்த்திட்ட அழகும்
உற்றவர் மற்றவர் என எண்ணாமல்
யாவரிடமும் அன்பும் மரியாதையுமாகப் பழகும் விதமும்
பிறர் பெருமையாக சொல்லும் போது
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என் மகளை
நினைந்து நினைந்து பெருமையால் பூரிக்கின்றேன்.

உன்னை உச்சிக்கு கொண்டு செல்ல நினைத்தேன்
நீயோ உச்சியின் சிகரத்தையும் தாண்டி
மேலே ஜோதியாய் ஒளிர்கின்றாய்
உன் ஒளிப் பார்வையால்
குழந்தைகள் மகிழ்வுடனும் வாழ்வில் பிரகாசமான
ஒளிர்வுடனும் சிறந்து விளங்க வழி காட்டு

No comments:

Post a Comment