Tuesday, December 13, 2011

புகழ் அஞ்சலி



என்ன புண்ணியம் செய்தாயோ?
இந்த பேறு பெற
எத்தனை தவம் செய்தாயோ
மகளின் கையால் நீராட்ட
மகனின் கையால் தீமூட்ட
கணவர் அருகிருந்து பொட்டிட்டு
பூச்சூட்டி புதுப் புடவை சார்த்தி
மறுபடி மாங்கல்யம் கட்ட
என்ன புண்ணியம் செய்தாயோ?
உற்றாரும் உறவினரும் புடை
சூழ்ந்து கூடி நிற்க
கல்யாண கோலத்தில் ரதம் ஏறி புறப்பட
என்ன புண்ணியம் செய்தாயோ?

No comments:

Post a Comment