Tuesday, December 13, 2011

தாயின் ஏக்கம்



அம்மா என்று அழைக்கும் அமுதக் குரல் அழகும்
ஆசையும் அன்புமாக அமுது படைத்த அழகும்
பாசமும் பரிவுமாக நலம் விசாரிக்கும் அழகும்
இவற்றையெல்லாம் துறந்து எங்கே மறைந்தனையோ?
என்னை மறந்தனையோ?
எப்படித்தான் உன் மனம் துணிந்ததோ
என்னை விட்டுப் பிரிய?

கலையாத கல்வியும் குறையாத செல்வமும்
நிறைவான வாழ்க்கையும் பரிவும் பிரியமுமான
பாசமுள்ள மக்களை விட்டுப் பிரிந்த
உன்னைத் தேடுகின்றேன் தேடுகின்றேன்
எங்கே தேடுவேன் எங்கு மறைந்தனையோ?

No comments:

Post a Comment