நன்முத்துக்கள் என மக்கட்செல்வம் நால்வரும்
மாமி என்றெண்ணாமல் உற்ற தோழியாய்
உருகுகின்ற மருமக்கள் மூவரும்
பெற்றவளும் உற்றவருமான எங்கள் இருவரையும்
அன்பிற்கும் பாசத்திற்கும் இலக்கணமான தங்கை ஒருத்திக்கும்
பாசமுடன் சுற்றிவரும் பேர குழந்தைகள் எண்வரும்
துயருற்று தவிக்கும் இவ்வேளையில்
பதினெட்டுக் கரங்கள் உடைய பரமேஸ்வரியின் பெயரைத் தாங்கிய நீ
சட்டத்திற்குள்ளிருந்து நீ சிரிக்கும் மர்மம் என்ன
உனையே நினைந்து வருந்திடும் உன் தாய்க்கு
பதில் என்ன சொல் சொல் சொல் மகளே